Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

10th Tamil 3 Mark Question and Answers Unit 7

10th Standard Tamil 
3 Marks Question & Answers 
Unit 7 | Kalvi Sri  
பத்தாம் வகுப்பு 
மதிப்பெண் சிறுவினா வினாக்கள் 
 

10th Tamil 3 Mark Question and Answers Unit 7 | பத்தாம் வகுப்பு - 3 மதிப்பெண் வினாக்கள் - சிறுவினா | KALVI SRI 
10th Tamil 3 Mark Question and Answers Unit 7  | 10th Tamil 3 Mark Question and Answers Unit 7 | 10th Tamil 3 Mark Question and Answers Unit 7  Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard   10th Tamil 3 Mark Question and Answers Unit 7 10th standard Tamil unit 6 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | kalvi sri | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST

இயல் – 7 சிறுவினா

10TH STANDARD 3 MARKS QUESTIONS & ANSWERS - பத்தாம் வகுப்பு - 3 மதிப்பெண் வினாக்கள் - சிறுவினா | KALVI SRI | சிறுவினா

1. '  முதல் மழை விழுந்ததும்என்னவெல்லாம் நிகழ்வதாக கு ..   ராஜகோபாலன் கவிபாடுகிறார் ?

  1. முதல் மழை விழுந்ததும்  மேல் மண் பதமாகிவிட்டது .
  2. வெள்ளி முளைத்திடுதுகாளைகளை ஓட்டி விரைவாகச் சென்று  பொன்னேரிலே மாட்டைப் பூட்டி , காட்டைக் கீறுவோம் .
  3. ஏர் புதிதல்ல ; ஏறும் நுகத்தடி கண்டதுகாடு புதிதன்றுகரையும் பிடித்தது தான்கை , கார் புதிதாய் இல்லை ; நாள் தான் புதிது ; நட்சத்திரம் புதிது .ஊக்கம் புதிது , உரம் புதிது .
  4. மாட்டைத் தூண்டி , கொழுவை அமுத்தி மண் புரள , மழை பொழியும் .
  5. நிலம் சிலிர்க்கும் ; நாற்று நிமிரும்எல்லை தெய்வம் எல்லாம் காக்கும்கவலை இல்லைநல்ல வேளையில்  உழவுத் தொழில்  செய்வோம்  என கு..ராஜகோபாலன் கவிபாடுகிறார் .

2.  அவந்தி நாட்டு மன்னன்மருத நாட்டு மன்னனுடன் போர்புரிந்து அந்நாட்டைக்  கைப்பற்ற நினைக்கிறான்அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக .

" வஞ்சித் திணைஇந்நிகழ்வுக்குப் பொருத்தமான திணை  ஆகும் .

வஞ்சித் திணை :

மண்ணாசை காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்றவஞ்சிப் பூவைச் சூடி போருக்குச் செல்வது வஞ்சித்திணை ஆகும் .

3 . விளக்கம் :

அவந்தி நாட்டு மன்னன்மருத நாட்டு மன்னனுடன்  போர்புரிந்து  நாட்டை கைப்பற்ற நினைத்துஅவந்தி நாட்டு படைவீரர்கள் வஞ்சிப் பூவைச் சூடி  போருக்குச் செல்வது "வஞ்சித் திணை " ஆகும் .

3." தலையைக்  கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்இடம் சுட்டிப் பொருள் விளக்குக .

இடம் :

" சிற்றகல் ஒளிஎன்னும்  மா . பொ. சிவஞானத்தின் 'எனது போராட்டம் ' தன்வரலாற்று நூலில் இருந்து இக்கட்டுரை வழங்கப்பட்டுள்ளது .

பொருள் :

ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னை தான் அதன் தலைநகரமாக இருக்க வேண்டும் என்று  அதன் தலைவர்கள் கருதினர் . அதனை எதிர்த்து மாநகராட்சி சிறப்புக் கூட்டம்  செங்கல்வராயன் தலைமையில் கூட்டிசென்னை பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து .பொ.சிமுழங்கிய முழக்கமாகும் .

விளக்கம்

சென்னை மாகாணத்திலிருந்து   ஆந்திர மாநிலம் பிரியும்போது  ,  சென்னை தான் அதன் தலைநகராக இருக்க வேண்டுமென ஆந்திர தலைவர்கள் கருதினர் . இதனை எதிர்த்து மாநகராட்சி  சிறப்பு கூட்டம் ஒன்றை  செங்கல்வராயன் தலைமையில் கூட்டி , "  தலையைக் கொடுத்தேனும்  தலைநகரைக் காப்போம்என்ற முழக்கத்தை . பொ .சிமுன்மொழிந்தார் . அதன்படி  25.03 .1953  நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு " சென்னை தமிழருக்கே "   என்ற உறுதிமொழியை வெளியிட்டார் .

 

4. "  பகர்வனர் திரிதரு நகர வீதியும் :

    பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

    கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் :

    தூசும் துகிரும் ஆரமும் அகிலும் "

இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?

பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக .

) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

காருகர்பொருள் தருக .

இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை ?

 விடை :

சிலப்பதிகாரம்

) பகர்வனர் , பட்டினும்

    பட்டினம்பருத்தி

பகர்வனர், நகர வீதியும்

    பட்டினம் , கூட்டு நுண்வினை

) நெய்பவர்

) சந்தனமும் அகிலும்

 

5. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக .

 பேரரசனது  மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி . பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய  இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப் பெறும் . சிறப்பாக அவனுடைய  போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி , அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க  எனக் கூறிபிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும் .

சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாதனங்களைப்  பொறிக்கும் வழக்கம்   நெடுநாள் இருந்ததில்லைமுதல் இராசராசனுடைய  எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது . இதன்கண் வம்ச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை . ஏனையை பகுதியில்  உள்ளன . எனினும்  இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது . இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன .

 விடை :

பேரரசனது  மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்கீர்த்தி . இது சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சியாண்டுபோர் வெற்றிகளையும்  வரலாற்றையும் கூறிதன் தேவியோடு நீடு வாழ்க என குறிப்பிடும் . முதல் இராசராசனுடைய  எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது . இதன்கண் வமிச பாரம்பரியம்  விதந்து ஓதாமல்  சுருக்கமாக உள்ளது . பின்வந்த  மெய்க்கீர்த்திகள்  வம்ச பரம்பரையை  விரித்துக் கூறியுள்ளன .

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்