Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்தல் , வழுவமைதி வகைகள்

 10th Tamil FRAME SENTENCES ,VAZHUVAMAITHI - பத்தாம் வகுப்பு - இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்தல் , வழுவமைதி வகைகள்  | KALVI SRI 

                                                            
1 .இரு சொற்களையும்  ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
         இயல் - 3                               ப .எண் : 68
1.  சிலை -  சீலை
சிலையைத்  திரைச்சீலையால்  மறைத்திருக்கிறார்கள் .
2. தொடு -   தோடு
தொடு உணர்வின்  மூலம்  தோடு காதில் உள்ளதை  தெரிந்துகொள்ளலாம் .                                              (அல்லது)
தாய் தன் குழந்தையின் காதைத் தொடுவதன் மூலம்   தோடு  அணிவித்தாள் .
3. மடு -  மாடு
கிணற்றில்  இருந்து  இறைக்கும் தண்ணீர்  மடு வழியாக  வாய்க்காலுக்கு சென்றதால்  மாடு தண்ணீர்  குடித்தது .  
                                                 (அல்லது)
மடுவில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தது ராமனின்  மாடு .
4. மலை - மாலை
மலையேறும் போது  மாலை நேரமாகிவிட்டது .        
                                                ( அல்லது)
மலை மீது இருக்கும் கோவிலுக்கு மாலை  நேரத்தில் சென்றேன் .
5. வளி - வாளி
  வளிமண்டல காற்று பெற  மரம் நட்டு  வாளி நிறைய தண்ணீர் ஊற்றுவோம் .
6. விடு - வீடு
இளம் வயதிலே தீய பழக்கங்களை விட்டு விடு ; வீடு சென்று மகிழ்ச்சியாக இரு .
இயல் - 4                                                       ப.எண் : 96
7. இயற்கை -  செயற்கை
பாதை தெரியாத இயற்கைக் காடுகளில்  பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன .
8. கொடு -  கோடு
ஆசிரியர் எழுதுகோலை  மாணவனிடம் கொடுத்து , கோடு வரையச்  சொன்னார் .
9.  கொள் -  கோள்
மனதிலே   நம்பிக்கை  வைத்துக் கொள் ;  கோள்களுக்கும் சென்று வருவாய் என தந்தை மகனுக்கு  தைரியம் ஊட்டினார் .
10 . சிறு -  சீறு
சிறுவயதில் வளர்த்த காளைக் கன்றுக்குட்டி பின்னாளில்  சீறிப்பாயும் காளையாக மாறி நின்றது  .
11 . தான் - தாம்
மாணவர்கள் தான் படித்தக் கருத்துகளைத்  தாமே எழுதிப் பார்த்து  மதிப்பீடு  செய்துகொண்டார்கள் .
12 . விதி -  வீதி
சாலை விதியை மதித்து , வீதியைக் கடந்து செல்வோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
2 .                    இயல் - 2                  ப, எண் :46
 1.  மலர் உண்டு . பெயரும்  உண்டு . -  இரண்டு தொடர்களை ஒரு தொடராக்குக .
மலரும் மலருக்குப் பெரும் உண்டு .
2 . தொடரில்  பொருந்தாப் பொருள் தரும்  மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக .                                    ப, எண் :46
இலுப்பை பூக்கள் இனிமையானவை . கரடிகள் மறத்தின் மீதேறி  அவற்றைப் பரித்து  உண்ணும் .  பாதிரிப் பூ  குடிநீருக்குத்   தன் மனத்தை ஏற்றும் .
விடை  :
இலுப்பைப்  பூக்கள் இனிப்பானவை ,  கரடிகள்  மரத்தின் மீதேறி ,  அவற்றைப் பறித்து  உண்ணும் .  பாதிரிப் பூ   குடிநீருக்குத்  தன் மணத்தை ஏற்றும் . 



-----------------------------------------------------------------------------------------------------------------------
3 .  கற்பவை கற்றபின்                            ப, எண் : 92


கீழ்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை  இனங்கண்டு எழுதுக .
அ)  அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார் .
விடை  :  கால வழுவமைதி
இத்தொடர்  ' நாளை விழாவிற்கு வருவார் '  என  என அமையவில்லை  என்றாலும்  பிழையாகக் கருதுவதில்லை . ஏனெனில்  அவரது வருகையின் உறுதி தன்மை நோக்கிக்  கால வழுவமைதியாக  ஏற்றுக் கொள்கிறோம் .
2 . அவனும் நீயும் அலுவலரைப்  பார்க்க ஆயத்தமாகுங்கள் .
இட வழுவமைதி
"நீயும் அவனும் " என தன்மை இடத்தை முதலில் கூறவில்லை என்றாலும் பிழையாகக் கருதாமல் இட வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
3 ." இந்தக் கண்ணன்   ஒன்றைச் செய்தான் என்றால் ,  அதை அனைவரும் ஏற்பர் "  என்று கூறினான் .
இட வழுவமைதி
இந்தக் கண்ணன்  என்பான்  தன்னைப்பற்றி  பிறரிடம் கூறும் போது  தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது   இட வழுவமைதி ஆகும் .
4. சிறிய வயதில் அந்த மரத்தில் தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் .
கால வழுவமைதி .
" இத்தொடரில்" சிறிய வயதில்   எள்பது இறந்தக்கால நிகழ்வாதலால்  " ஊஞ்சல் கட்டி விளையாடினோம் "  அமையாததால்  பிழையாகக் கருதவில்லை . ஏனெனில்  சிறுவயதில் ஊஞ்சல் கட்டி விளையாடியதின்   உறுதித்தன்மையை நோக்கி காலவழுவமைதி ஆக ஏற்றுக் கொள்கிறோம் 
5 .  செல்வன் இளவேலன்  இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்திருக்கிறார் .
பால் வழுவமைதி.
இத்தொடரில் " சாதனை புரிந்திருக்கிறான் "  என அமையாமல் " சாதனை புரிந்திருக்கிறார் "  என பலர்பால் கூறப்பட்டுள்ளதால் இது பால் வழுவமைதியாகக்  கொள்ளப்பட்டது .

--------------------------------------------------------------------------------------------------------------------------
4 .அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக .
அ)  தந்தை , "  மகனே !  நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா!"  என்று சொன்னார் .(  ஆண்பால்  பெயர்களைப் பெண்பாலாக  மாற்றித் தொடர் எழுதுக .) 
  தாய் , "  மகளே நாளை  உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா !"  என்று  சொன்னாள் .
ஆ)  அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது . அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பினர். (  வழுவை வழாநிலையாக மாற்று )
அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள் .  அக்கா புறப்படும்போது , அம்மா வழியனுப்பினார் .
இ) "  இதோ முடித்து விடுவேன் "  என்று  செயலை முடிக்கும் முன்பே கூறினார் .(  வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக )
"  இதோ ,  முடித்துவிட்டேன் "  என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார் .
ஈ)  அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை .(  படர்க்கையை முன்னிலையாக ,  முன்னிலையைத் தன்மையாக , தன்மையைப் படர்க்கையாக மாற்றுக ).
நீ  என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை .
உ)  குழந்தை அழுகிறான் ,  பார் . (  வழுவை வழாநிலையாக மாற்றுக . )
குழந்தை அழுகிறது பார் .




கருத்துரையிடுக

0 கருத்துகள்