Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

TN 12th Public Exam must conduct says Secretary General of the MDMK Vaiko.

TN 12th Public Exam must conduct says Secretary General of the MDMK Vaiko

+2 தேர்வைக் கண்டிப்பாக நடத்த வேண்டும். வைகோ வலியுறுத்தல்!
தமிழக அரசு கண்டிப்பாக ப்ளஸ் 2 தேர்வுகளை நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:-

' மத்திய அரசின் சிபிஎஸ்இ , ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education) ஆகியவற்றில் , பிளஸ் 2 தேர்வை நடத்துவது இல்லை என , பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார் . மாணவர்களின் உடல்நலம் , மனநலத்தைக் கணக்கில் கொண்டு , இந்த முடிவை எடுத்து இருப்பதாக விளக்கம் அளித்து இருக்கின்றார் , ஆனால் , நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை , இந்த ஆண்டும் நடத்தப் போகின்றார்கள் . அப்படியானால் , அந்தத் தேர்வு எழுதுகின்ற அந்த மாணவர்களின் உடல்நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா ? அவர்கள் மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா ? அவர்களை மட்டும் கரோனா தொற்று தாக்காமல் , விதிவிலக்கு அளிக்குமா ?

எனவே , இது ஒரு சூழ்ச்சித் திட்டமே ஆகும் . காரணம் , அவர்கள் ஏற்கனவே கொண்டு வந்து திணித்து இருக்கின்ற புதிய கல்விக்கொள்கையின்படி , கல்லூரிகளில் சேருவதற்கு , மேனிலைப்பள்ளித் தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது தேசிய தேர்வு முகமை நடத்தும் திறன் அறித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சேர்க்கை என்று கூறி இருக்கின்றார்கள் . எனவே , இந்த ஆண்டு மட்டும் அல்ல , இனி எப்போதுமே பிளஸ் 2 தேர்வு
நடத்த வேண்டிய தேவை இல்லை என்பதுதான் அவர்கள் திட்டம் ஆகும் . ஆனால் , மாநில அரசுகளின் பாடத்திட்டங்களைப் பொறுத்தமட்டில் , மேனிலைப் பள்ளித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் , கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகின்றது . அயல்நாடுகளின் பள்ளி , கல்லூரிச் சேர்க்கைக்கும் அந்த மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன .

வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் அதுவே தகுதியாக இருக்கின்றது . மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும் ; நீட் தேர்வு கூடாது என்பதுதான் , தமிழ்நாட்டின் கருத்து ஆகும் . எனவே , ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் , தமிழ்நாட்டின் கல்வியாளர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு , அதன்படி தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் . கரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு , ஒருமாத முன் அறிவிப்போடு , மேனிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும்
தமிழ்நாட்டில் வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பு உள்ளதால் , மாணவர்கள் குழப்பம் அடையாமல் , தங்களின் பயிற்சிகளைத் தொடருகின்ற வகையில் , மேனிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்ற தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் '

கருத்துரையிடுக

0 கருத்துகள்