11th Tamil
Refresher Course Answer key
Topic 24 பழமொழி வாழ்க்கை நிகழ்வு
11th Tamil Refresher Course Answer key Topic 24 பழமொழி வாழ்க்கை நிகழ்வு. 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 24 பழமொழி வாழ்க்கை நிகழ்வு வினாக்களும் விடைகளும்.
11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 24 பழமொழி வாழ்க்கை நிகழ்வு
11th Tamil Refresher Course 24. பழமொழி வாழ்க்கை நிகழ்வு
Answer key 2021-2022
மதிப்பீடு
1. பழமொழியை தொல்காப்பியம் எச்சொல்லால் குறிக்கின்றது ?
- பழமொழியை தொல்காப்பியம் ' முதுசொல் ' என்று கூறுகிறது.
2. பழமொழி நம் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவம் யாது?
- தமிழர்களின் பண்பாட்டோடும் , கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடையது பழமொழி .
- பழமொழிகள் மூலம் தமிழர்கள் நற்பண்புகளையும் , நல்ல வாழ்வியல் முறைகளையும் கற்றுக் கொண்டனர்.
- பழமொழிகள் சுருக்கமாக இருந்தாலும் அரிய வாழ்வியலை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்தும்.
3. பழமொழி என்றால் என்ன ?
- பழமொழி என்பது சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் ஆகும்.
4. 'இளங்கன்று பயமறியாது வாழ்க்கையோடு தொடர்புப்படுத்தி கதை எழுதுக.
- இளங்கன்று பயம் அறியாது"
பொருள்:
- இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம் அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்து விடுவர். அது பேராபத்தாய் கூட முடிந்து விடும்.
- வேலவன் என்பவன் பதினோராம் வகுப்பில் பயிலும் மாணவன். மிகவும் துடிப்புடன் செயலாற்றக் கூடியவன். ஊரிலும் சரி, பள்ளியிலும் சரி, தன்னை ஒரு வீரன் என்று காட்டிக் கொள்வதில் பெருமைப்படக் கூடியவன். யாரும் செய்யத் துணியாத காரியத்தையும் உடலை வருத்தித் கடினமானாலும் அதைச் செய்து முடித்து விடுவான். ஒருமுறை அவனது நண்பர்கள்
- அவன் தெருவின் புற்றிலுள்ள பாம்பினைப் பிடிப்பதற்கு வேலவனிடம் பந்தயம் வைத்தனர். பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என நினைத்த வேலவன் பாம்பினைப் படிக்க புற்றினுள்
- கை விட்டதும் பாம்பு கடித்து விட்டது. அவன் மயக்கமடைந்த செய்தியையறிந்து பெற்றோர்கள் ஓடிவந்து அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தான்.
- - இந்நிகழ்வினைக் கண்டு "இளங்கன்று பயமறியாது" என்ற விடுகதையை உணர்ந்து கொண்டோம்.
- இளங்கன்று - இளமைப் பருவமுடைய வேலவன் பயம் அறியாது - தனக்கு உயிருக்கு நேரக்கூடிய ஆபத்தை எண்ணாமல் பாம்பின் புற்றினுள் கை விட்டது.
0 கருத்துகள்