Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

11th Tamil Refresher Course Answer key Topic 21 துறை

11th Tamil

Refresher Course Answer key 

Topic 21 துறை


11th Tamil Refresher Course Answer key Topic 21 துறை. 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11th Tamil Refresher Course Answer key 2021-2022

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 21  துறை வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 21 துறை

11th Tamil Refresher Course 21. துறை 
Answer key 2021-2022

மதிப்பீடு

1. துறை என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

  • துறை என்ற சொல்லுக்கு ஒரு சிறிய பிரிவு அல்லது பகுப்பு என்பது பொருள். 

2. துறை சிறுகுறிப்பு வரைக.

  • ' திணை ' என்னும் சொல் , வாழ்க்கை ஓடும் ஒழுகலாற்றினைக் குறிக்கும். ஒழுகும் ஆறு ஒழுகலாறு. 
  • ஆற்றில் இறங்கிப் பயன்படுத்தும் இடத்தைத் துறை என்கிறோம். 
  • சான்று - செந்துறைப் பாடாண்பாட்டு.

3. முதுமொழிக்காஞ்சி துறையைச் சான்றுடன் விளக்குக.

துறை: 
  • முதுமொழிக் காஞ்சித் துறை
  • முதுமொழி என்பது அறிவு முதிர்ச்சியில் மொழியும் சொல்.
துறை விளக்கம்:
  • அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும்
  • தன்மையைக் கூறுதல்.

சான்று:

"நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோரே"

                                                             (புறநானூறு)

சான்று விளக்கம்:

  • உடம்பானது உணவால் அமைந்த பிண்டம். உடம்பில் உயிர் இருக்க வேண்டுமென்றால் உணவு வேண்டும். உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப் பொருள். நிலத்தில் நீரைச் சேர்த்து வைத்தால், உணவு பொருளின் விளைச்சலைப் பெருக்கலாம். எனவே நிலத்தில் நீர் தங்கும்படி
  • சேமித்து வைத்தவர் உடலில் உயிரைப் படைத்தவர் ஆவார்.

துறைப்பொருத்தம்:

  • மற்றவர்கள் பெறும் புகழை விட நீர்நிலைகளைப் பெருக்கியவரின் பெயர் இவ்வுலகில் உயிர்க்கொடுத்தோர் பட்டியலில் என்றென்றும் நிலைத்திருக்கும். எனவே, 'நிலத்தில் நீர்நிலைகளைப் பெருகச் செய்க என்று குடபுலவியனார், நெடுஞ்செழியனுக்கு அறிவுரை கூறுவதால், இப்பாடல்
  • முதுமொழிகாஞ்சித் துறைக்குச் சான்றாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்