Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

எண்ணும் எழுத்தும் மதிப்பீட்டுப் பணியில் இருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

எண்ணும் எழுத்தும் மதிப்பீட்டுப் பணியில் இருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.


எண்ணும் எழுத்தும் மதிப்பீட்டுப் பணியில் இருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டுமென்று இன்று மாலை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலகத்திலும் மதிப்பிற்குரிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுக்க வேண்டுகிறேன்
✍️✍️✍️✍️✍️✍️✍️

வணக்கம் நண்பர்களே

 ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு இன்று தமிழகம் எங்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது.

 இந்த பயிற்சி முடிந்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்தில் பயிற்சியில் உள்ள ஆசிரியர்கள் மாலையில் மதிப்பிற்குரிய உங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சந்தித்து எண்ணம் எழுத்தும் மதிப்பீட்டு பயிற்சியில் இருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சார்ந்து முதன்மை கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமான இதிலிருந்து எங்களை விடுவிக்க வேண்டும் என்ற கருத்துள்ள கோரிக்கை மனுவை கொடுக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

 முதுகலை ஆசிரியர்கள் 11 ,12 என்ற இரண்டு பொது தேர்வுக்கு மாணவர்களைத் தயார் படுத்தும் பணி இருக்கிறது .

இன்னும் பாடங்களை நடத்தவே போதிய நேரமில்லை உள்ளிட்ட பல்வேறு பணிகளை, உள்ளது உள்ளபடி எழுதி ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இன்று மாலை தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நண்பர்களே

✍️✍️✍️✍️✍️✍️✍️

ஆ.இராமு,

மாநிலத் தலைவர்,

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,

 DRPGTA ,

7373761517.

கருத்துரையிடுக

0 கருத்துகள்