Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

10th Tamil unit 6 Short Answers

 10th Tamil unit 6 Short Answers 

10th Tamil unit 6 Short Answers Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard   10th Tamil unit 6 one marks |  10th Tamil unit 6 Short Answers 10th standard Tamil unit 6 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST | 10th Tamil One Marks Question and Answers | 10th Tamil Unit 6 Question And Answers 

 10th Tamil unit 6 one mark Question and Answers | 10th samacheer kalvi

10th Tamil Unit 6  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths ,  Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 6 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments,  assignments and to score high marks in board exams.  10th Tamil Unit 6 நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths |  10th Tamil unit 6 one mark Question and Answers | Samacheer Kalvi Guide | 10th Tamil Solutions  | 10th samacheer kalvi

10th Tamil unit 6 one marks question and answers | 10th samacheer kalvi

Tamilnadu Samacheer Kalvi | 10th Tamil Solutions | 10th Tamil unit 6 one mark Question and Answers 


10th Tamil Unit 6 One Marks |  10th Tamil unit 6 one mark Question and Answers | 10th samacheer kalvi 

10th Tamil unit 6 Short Answers

நிகழ்கலை

குறுவினா

1. “நேற்று நான் பார்த்த அர்ச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக மாற்றுக.
நேற்று நான் பார்த்த அர்ச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையும், சிறந்த நடிப்பையும், இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாக சேகர் என்னிடம் கூறினான்.

சிறுவினா

1. படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.
அ) காலில் சலங்கை அணிந்து ஆடும் நிகழ்கலை ஏதேனும் இரண்டு கூறுக. ஒயிலாட்டம், தேவராட்டம்.
ஆ) கரகாட்டம் என்றால் என்ன? கரகம் என்பது, பித்தளைச் செம்பையோ சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுதல் ஆகும்.

குறுவினா

1. நிகழ்கலை என்றால் என்ன?
சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை |நிகழ்கலைகள்.
 
2. இலக்கியத்தில் கரகத்தின் பங்கு யாது?
புறநானூறு : 
நீரற வறியாக் கரகத்து’ என்னும் புறநானூற்றுப் பாடலடியில் கரகம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
சிலப்பதிகாரம் :
மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ஒன்று ‘குடக்கூத்து’ எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 
3. தமிழகத்தில் கரகாட்டம் நிகழ்த்தப்படும் மாவட்டங்கள் யாவை?
திருநெல்வேலி
திண்டுக்கல்
மதுரை
தஞ்சாவூர்
திருச்சி
கோயம்புத்தூர்

4. மயிலாட்டம் என்றால் என்ன?
மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு நையாண்டி மேளத்திற்கு ஏற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டம்.
கரகாட்டத்தின் துணையாட்டம் மயிலாட்டமே.
 
5. மயிலாட்டத்தில் பின்பற்றப்படும் அசைவுகள் யாவை?
ஊர்ந்து ஆடுதல்
தாவியாடுதல்
மிதந்து ஆடுதல்
இருபுறமும் சுற்றியாடுதல்
இறகை விரித்தாடுதல்
அகவுதல்
தலையைச் சாய்த்தாடுதல்
தண்ணீர் குடித்துக் கொண்டே ஆடுதல்

6. காவடியாட்டம் என்றால் என்ன?
‘கா’ என்பதன் பொருள் பாரந்தாங்கும் கோல்.
இருமுனைகளிலும் சம எடைகளைக்கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது காவடியாட்டம்.

7. காவடியின் அமைப்புக்கேற்ப அவை எந்தெந்தப் பெயர்களில் அழைக்கப்படுகின்றன?
மச்சக்காவடி
தேர்க்காவடி
சர்ப்பக்காவடி
பறவைக்காவடி
பூக்காவடி

8. காவடியாட்டம் ஆடப்படும் நாடுகள் எவை?
இலங்கை , மலேசியா உட்பட தமிழர் வாழும் பிற நாடுகள்.
 
9. ஒயிலாட்டம் என்றால் என்ன?
ஒரே நிறத்துணியை முண்டாசு போலக் கட்டுதல்.
காலில் சலங்கையை அணிதல்.
சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஒயிலாக ஆடும் குழு ஆட்டம்.
கம்பீரத்துடன் ஆடுதல் தனிச்சிறப்புடையது.

10. ஒயிலாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள் யாவை?
தவில், தப்பு, சிங்கி, தோலால் கட்டப்பட்ட குடம், டோலக்

11. தேவராட்டம் என்றால் என்ன?
வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம்.

12. தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி குறித்து எழுதுக.
தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி தேவதுந்துபி.
இதன் பொதுவான பெயர் உறுமி.

13. தேவராட்டத்திற்குரிய உடை மற்றும் அலங்காரம் குறித்து எழுதுக.
உடை :
இடையிலும் தலையிலும் சிறுதுணி கட்டுவர்.
வேட்டி அணிந்திருப்பர்.
அலங்காரம் :
கால்களில் சலங்கை அணிவர்.
எளிய ஒப்பனை செய்து கொள்வர்.

14. சேவையாட்டம் என்றால் என்ன?
தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை சேவையாட்டம்.
இசைக்கருவிகள் :
சேவைப்பலகை, சேமக்கலம், ஜால்ரா.
இசைச்சார்பு கலையாகவும், வழிபாட்டுக் கலையாகவும் உள்ளது.

15. பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
புரவி ஆட்டம்
கச்சி கொடி (இராஜஸ்தான்)
புரவி நாட்டியம்
குதிரைக்களி (கேரளா)

16. தப்பாட்டம் என்றால் என்ன? அதற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
தப்பு :
தப்பு என்ற தோற்கருவியை இசைத்துக் கொண்டே, அதன் இசைக்கேற்ப ஆடும் ஆட்டமே தப்பாட்டம்.
வேறு பெயர்கள் :
தப்பாட்டம், தப்பு, தப்பட்டை, பறை.
‘தப் தப்’ என ஒலிப்பதால் தப்பாட்டம் எனப் பெயர் பெற்றது.
 
17. தப்பாட்டம் நிகழ்த்தப்படும் இடங்களைக் கூறுக.
கோவில் திருவிழா
விளம்பர நிகழ்ச்சி
திருமண விழா
விழிப்புணர்வு முகாம்
இறப்பு

18. ‘பறை’ குறிப்பு வரைக.
பறை – தமிழிசைக் கருவி.
பறை என்பதற்குப் பேசு என்பது பொருள்.
பேசுவதை இசைக்கப்படும் தாளக்கருவி பறை.
கருப்பொருள் :
தொல்காப்பியர் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்று பறை.

19. தப்பாட்டத்திற்குரிய ஆட்டக் கூறுகள் யாவை?
வட்டமாக ஆடுதல்
உட்கார்ந்து எழுதல்
குதித்துக் குதித்து ஆடுதல்
நடையாட்டம்
இரண்டு வரிசையாக எதிர் எதிர் திசையில் நின்று ஆடுதல்.
 
20. புலியாட்டம் என்றால் என்ன?
தமிழரின் வீரத்தை சொல்லும் கலையாகத் திகழ்வது புலியாட்டம்.
பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் ஒன்று.
புலியைப் போன்று கறுப்பும் மஞ்சளுமான வண்ணக் கோடுகளையிட்டுத் துணியால் ஆன வாலை இடுப்பில் கட்டி ஆடுவர்.

21. புலியாட்டத்திற்குரிய அசைவுகளைக் கூறுக.
புலியைப் போல நடத்தல்
எம்பிக் குதித்தல்
பதுங்குதல்
நாக்கால் வருடுதல்
பாய்தல்
பற்கள் தெரிய வாயைப் பிளந்து உறுமுதல்.

22. தெருக்கூத்து – குறிப்பு வரைக.
ஆடுகளம் :
திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை, அணி ஒப்பனையுடன் தெருச்சந்திப்புகளிலும் களத்து மேடுகளிலும் நடத்தப்படும் நடனம்.
ஒருங்கிணைப்பு :
இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடுகளுடன் கதையை ஒருங்கிணைத்து வழங்குவர்.

23. கூத்துப்பட்டறை ந. முத்துசாமி பெற்ற விருதுகள் யாவை?
இந்திய அரசின் தாமரைத்திரு விருது. (பத்மஸ்ரீ)
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது.
 
24. ‘அருச்சுனன் தபசு’ – குறிப்பு வரைக.
மழை வேண்டி நிகழ்த்தப்படும் தெருக்கூத்தை அருச்சுனன் தபசு என்பர்.

25. தோற்பாவைக் கூத்து என்றால் என்ன?
தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை எனப் பெயர் பெற்றது.
தோலில் செய்த வெட்டு வரைபடங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்துவர்.
கதைக்கேற்ப மேலும் கீழும், பக்கவாட்டிலும் அசைத்துக் காட்டி உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.

26. தோற்பாவைக் கூத்து எவ்வடிவில் மாற்றம் பெற்றுள்ளது?
கையுறைப் பாவைக்கூத்து, பொம்மலாட்டம்.

27. கரகாட்டத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் யாவை?
நையாண்டி மேளம், தவில், நாகசுரம், பம்பை.

28. கரகாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
கரகம், கும்பாட்டம், குடக்கூத்து.
 

சிறுவினா

1. பொய்க்கால் குதிரையாட்டம் என்னும் நிகழ்கலை குறித்து நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.
“போலச் செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.
மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரைவடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம்.
அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம், ‘புரவி ஆட்டம்’, ‘புரவி நாட்டியம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாட்டம் இராஜஸ்தானில், ‘கச்சிக்கொடி’ என்றும் கேரளத்தில், 
‘குதிரைக்களி’ என்றும் அழைக்கப்படுகிறது.

2. கூத்துப்பட்டறை ந. முத்துசாமி குறித்தெழுதுக.
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் தான் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி.
“நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றார்.
இவர் தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துகொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கினார்.
நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தினார்.
இவரின் நாடகங்கள் பெரும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின.
இவர் இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.
பூத்தொடுத்தல்

குறுவினா

1. “சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள்” – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கிற ஒல்லித் தண்டுகளாகக் குறிப்பிடப்படுவோர் பெண்கள். இவர்கள் அமைதியான முறையில் இவ்வுலகத்தைத் தாங்கி நிறுத்தப் போராடும் போராளிகள்.

சிறுவினா

1. நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.
ஒப்பீடு
நவீன கவிதையில் பூவின் மென்மை, அழகு, நளினத்தன்மை, எதற்கும் வருந்தாமல் சிரிக்கும் மலரைப் பெண்ணோடு ஒப்பிட்டுள்ளார்.
நாட்டுப்புறப் பாடலில்
பெண் தெய்வமாகிய மாரியோடு ஒப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரு பாடலிலும் பெண்ணை மலரோடு ஒப்பிட்டுப் பாடுவதை அறியமுடிகிறது.

குறுவினா

1. ‘பூத்தொடுத்தல்’ என்னும் கவிதை நூலின் ஆசிரியரைப் பற்றி நீ அறிந்தவற்றைக் கூறுக.
ஆசிரியர் பெயர் : கவிஞர் உமா மகேஸ்வரி
பிறப்பு : மதுரை
வாழ்ந்து வரும் ஊர் : தேனி, ஆண்டிப்பட்டி.
நூல்கள் : நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை.
 
2. பூக்களைத் தொடுக்கும் போது இறுக்கி முடிச்சிடுவதாலும் தளரப் பிணைப்பதாலும் நிகழ்வது என்ன?
இறுக்கி முடிச்சிடுவதால் காம்புகளின் கழுத்து முறியும்.
தளரப் பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும்.

3. பூத்தொடுத்தல் என்னும் கவிதையில் பூவை என்ற சொல் யாரைக் குறிக்கிறது? அப்பூவைத் தொடுப்பது எப்படி?
பூவை என்ற சொல் பெண்ணைக் குறிக்கிறது.
மனமாகிய நுட்பமான நூலால் மட்டுமே தொடுக்க முடியும்.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

சிறுவினா

1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு :
கிண்கிணி : கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின.
அரைஞாண் மணி : இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரை வட்டங்கள் ஆடின.
சிறு வயிறு : பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்தாடியது.
நெற்றிச் சுட்டி : பட்டம் கட்டிய நெற்றியில் பொட்டுடன் வட்டவடிவான சுட்டி பந்தாடியது.
குண்டலங்கள் : கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடின.
உச்சிக் கொண்டை : உச்சிக் கொண்டை அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளியுள்ள முத்துக்களோடு ஆடியது.
ஆடுக : வைத்திய நாதபுரி முருகனே! செங்கீரை ஆடி அருள்புரிவாயாக.
பவளம் போன்ற உன் திருமேனி ஆட, செங்கீரை ஆடுக.
 
இலக்கணக் குறிப்பு.
குண்டலமும் குழைகாதும் – எண்ணும்மை
ஆடுக – வியங்கோள் வினைமுற்று
கட்டிய – பெயரெச்சம்
வட்டச் சுட்டி – குறிப்புப் பெயரெச்சம்
செங்கீரை, செம்பொன்னடி – பண்புத் தொகை
பைம்பொன், சிறுகிங்கிணி – பண்புத் தொகை

குறுவினா

1. குமரகுருபரர் குறிப்பு வரைக.
ஆசிரியர் பெயர் – குமரகுருபரர்
காலம் – கி.பி. 17ஆம் நூற்றாண்டு
புலமை பெற்ற மொழிகள் – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி.
இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை.
 
2. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பிள்ளைத்தமிழ் இரண்டு வகைப்படும். அவை:
ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்.

3. ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களையும் எழுதுக.
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.

4. பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களையும் எழுதுக.
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல்.

5. ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் உரிய பொதுவான பருவங்கள் எத்தனை? அவை யாவை?
பொதுவான பருவங்கள் ஏழு. அவை:
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
 
6. பிள்ளைத்தமிழில் குமரகுருபரர் குறிப்பிடும் அணிகலன்கள் யாவை? அவை எவ்விடங்களில் | அணியப்படும் என்பதையும் பட்டியலிடுக.
 
7. செங்கீரைப் பருவம் குறிப்பு வரைக.
செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போல குழந்தையின் தலை 5-6ஆம் மாதங்களில் மென்மையாக அசையும்.
இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகம் அசைந்தும் ஆடும்.
 
8. பிள்ளைத்தமிழில் பாட்டுடைத் தலைவராகக் கருதப்படுவோர் யார்?
இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு குழந்தையாகக் கருதிப் பாடப்படும்.
 
9. குமரகுருபரர் சுட்டி குறித்து கூறுவது யாது?
பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவான சுட்டி பதிந்தாடட்டும்.

சிறுவினா

1. பிள்ளைத்தமிழ் குறிப்பு வரைக.
வகை :
96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
வரையறை :
இறைவனையோதலைவரையோ அரசனையோ பாட்டுடைத்தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதி பாடப்படும். பாட்டுடைத் தலைவனின் செயற்கரிய செயலை எடுத்தியம்பும்.
வகைகள் : இரண்டு வகைப்படும். அவை: ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ்.
பருவங்களின் எண்ணிக்கை :
பத்து. பருவத்துக்குரிய 10 பாடல்கள் வீதம் 100 பாடல்கள் உள்ளன.
ஆண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள் :
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் :
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல்.
பொதுவான பருவங்கள் :
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, வருகை, முத்தம், அம்புலி.

கம்பராமாயணம்

குறுவினா

1. உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
‘கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய்’ என்று சொல்லி எழுப்பினார்கள்.
வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.

சிறுவினா

1. ‘கடற்கரையில் உப்புக்காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப்பகுதியில் மலைப்பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத்தொழிலும் நடைபெறுகின்றன’ – காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும் பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.
தண்டலை, வெய்யோன், நெடுந்திரை, நெடும்படை, புதுமணல் – பண்புத்தொகைகள்
சண்பகக்காடு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
கிடந்து, கடந்து, விழித்து – வினையெச்சங்கள்
நோக்க – பெயரெச்சம்
மறிகடல், விரிசோதி – வினைத்தொகைகள்
எழுந்திராய்! எழுந்திராய்! – அடுக்குத்தொடர்
உறங்குவாய்! உறங்குவாய்! – அடுக்குத்தொடர்
காலதூதர் – உருவகம்

குறுவினா

1. கம்பரின் பெருமையைச் சுட்டும் தொடர்கள் யாவை?
கல்வியில் பெரியவர் கம்பர்.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்.

2. கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?
சரசுவதி அந்தாதி
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சிலை எழுபது
திருக்கை வழக்கம்

3. கம்பராமாயணம் குறிப்பு வரைக.
இராமனது வரலாற்றைக் கூறும் நூல்.
கம்பர் தம் எழுதிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
ஆறு காண்டங்களை உடையது.
சந்தநயம் மிக்கது.

4. சரயு ஆறு எவ்விடங்களிலெல்லாம் பரவிப் பாய்ந்ததாக கம்பர் குறிப்பிட்டுள்ளார்?
மகரந்தம் சிந்துகின்ற சோலைகள்
புதுமணல் தடாகங்கள்
அரும்புகள் மலரும் பொய்கைகள்
நெல்வயல்கள்

5. கோசல நாட்டில் எவையெல்லாம் இல்லை? ஏன்?
வறுமை இல்லாததால் அங்கே கொடை இல்லை.
நேருக்கு நேர் போர் புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை.
பொய்மொழி இல்லாததால் மெய்மை தனித்து விளங்கவில்லை.
கேள்விச் செல்வம் மிகுந்திருப்பதால் அறியாமை இல்லை.

6. இராமனின் வடிவை எவற்றிற்கெல்லாம் உவமையாக்கியுள்ளார் கம்பர்?
மை
நீலக்கடல்
பச்சை நிற மரகதம்
கார்மேகம்

7. கங்கை காண் படலத்தில் வேடனின் கூற்றை எழுதுக.
யானைகள் கொண்ட சேனையைக் கண்டு, புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில் வீரனல்ல நான்.
இராமனுடைய தோழமையை எண்ணாமல் ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றை அவர்கள் தனியே கடந்து போக விடலாமா?
அவ்வாறு செய்தால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என்று உலகத்தார் என்னைப் பழிசொல்ல மாட்டார்களா? என்று கூறினான்.
 

சிறுவினா

1. கம்பர் குறிப்பு வரைக.
ஆசிரியர் பெயர் : கம்பர்
பிறந்த ஊர் : சோழ நாட்டில் உள்ள திருவழுந்தூர்
ஆதரித்தவர் : திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்
பெற்ற சிறப்புகள் : கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’
இயற்றிய நூல்கள் : கம்பராமாயணம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏர்
எழுபது, சிலை எழுபது.

2. இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் கவி எவ்வாறு காட்டுகிறது. (அல்லது) மருதம் எவ்வாறு வீற்றிருக்கிறது?
குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆடின.
விரிதாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல் தோன்றின.
சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழுந்தன.
மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல் காட்சியளித்தன.
நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிந்தன.
மகர யாழின் தேன் ஒத்த இசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருந்தது.

3. சரயு ஆறு பாய்ந்து வருவதைக் கம்பர் எவ்வாறு காட்சிப்படுத்துகின்றார்?
மகரந்தம் சிந்தும் சோலைகள்,
மரங்கள் மிகுந்த செண்பகக் காடுகள்,
அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள்,
புதுமணல் குளங்கள்,
குருக்கத்தி வேலியுள்ள பாக்குத் தோட்டங்கள்
நெல் வயல்கள் – இவை அனைத்தும் பரவிப் பாய்கிறது. சரயு ஆறு, ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாய்கின்றது.
 
4. கும்பகருணனைக் கம்பர் தம் கவிநயத்தால் எவ்வாறு எழுப்புகிறார்?
உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது.
அதனைக் காணபதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!
காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த எமனுக்குத் தூதரானவர் கையில் இனிப்படுத்து உறங்குவாயாக!
அகப்பொருள் இலக்கணம்
மொழியை ஆள்வோம்
மொழிபெயர்ப்பு:
Koothu
Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient Puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.
Answer:
தமிழாக்கம் :
கூத்து
தெருக்கூத்து அதன் பெயருக்கு ஏற்றாற்போல் தெருவில் நடக்கும் ஒரு மிகச் சிறந்த கலை. இதில் கிராமப்புற கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதன் கதைகள் பழங்காவியமான இராமாயணம், மகாபாரதம் மற்றும் பழைய புராணங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் பழைய பாடல்களை உரையாடலுடன் கலைஞர்கள் உருவாக்குகிறார்கள். பதினைந்து முதல் இருபது கலைஞர்கள் சிறிய இசைக்குழுவாக சேர்ந்ததுதான் தெருக்கூத்து கூட்டம். இசைக்குழுவில் பல பாடல்கள் இருந்தபோதும் கலைஞர்கள் தங்கள் குரலிலேயே பாடுவார்கள். கலைஞர்கள் மிகச் சிறந்த உடையலங்காரமும் ஒப்பனையும் செய்திருப்பர். கிராமப் புறங்களில் கூத்துமிகவும் பிரபலமானது.
தொடர்களை அறிவோம், தொடர்ந்து செய்வோம்.

1. ஒரு தனிச்சொற்றொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ இருந்து ஒரு பயனிலையைக் கொண்டு அமையும்.
எ.கா: அ) மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார்.
ஆ) மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.

2. தொடர் சொற்றொடர், ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலையைக் கொண்டு இருக்கும்.
எ.கா: அ) இனிய நிலா பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார்.
ஆ) அன்வர் அரங்கத்திற்கு வந்து நாடகம் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.

3. கலவைச் சொற்றொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத் தொடர்களும் கலந்து வரும்.
எ.கா: அ) மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்.
பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான் – முதன்மைத் தொடர்
மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் – துணைத் தொடர்
தொடர்களை அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
எ.கா: அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.
(தனிச் சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடர்களாக மாற்றுக)
அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.

1. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
(தொடர் சொற்றொடராக மாற்றுக) இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி, புத்தக அடுக்கங்களில் அடுக்கி, புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.

2. ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.) ஒயிலாட்டக் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக் கொள்வர். காலில் சலங்கை அணிந்து கொள்வர். கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
 
3. கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
(கலவைச் சொற்றொடராக மாற்றுக) கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

4. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக) ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அதனால் அறையில் உள்ளவர்களின் பேச்சு தடைபட்டது.
பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச்சொற்களாக மாற்றுக.
புதிர்:
உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.
Answer:
தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டைரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!

2. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருள்களைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
உழவர்கள் வயலில் உழுதனர்.
நெய்தல்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர். (அல்லது) தாழைப்பூச் செடியைப் பார்த்தவாரே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர்.
முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே இடையர்கள் காட்டுக்குச் சென்றனர்.

குறுவினா

1. பொருள் இலக்கணம் குறிப்பு வரைக.
பொருள் என்பது ஒழுக்க முறை.
தமிழர் வாழ்வியல் ஒழுக்கங்களை அகம், புறம் என வகுத்தனர்.
இவற்றைப் பற்றிக் கூறுவதே பொருள் இலக்கணம்.

2. அகத்திணை என்றால் என்ன?
அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது அகத்திணை ஆகும்.
 
3. அன்பின் திணைகள் எத்தனை? அவை யாவை?
அன்பின் திணைகள் ஐந்து. அவை:
குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை.

4. அகத்திணைக்குரிய பொருள்கள் எத்தனை? அவை யாவை?
அகத்திணைக்குரிய பொருள்கள் மூன்று. அவை:
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.

5. முதற்பொருளாவது யாது?
நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆகும்.

6. ஐவகை நிலங்களின் அமைவிடங்களைக் கூறுக.
குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும்

7. பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பொழுது இரண்டு வகைப்படும் அவை: பெரும்பொழுது, சிறுபொழுது.
 
8. பெரும்பொழுதிற்குரிய கூறுகள் எத்தனை? அவை யாவை?
பெரும்பொழுதிற்குரிய கூறுகள் ஆறு. அவை:
கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம்.

9. சிறுபொழுதிற்குரிய கூறுகள் எத்தனை? அவை யாவை?
சிறுபொழுதிற்குரிய கூறுகள் ஆறு. அவை:
காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை.

10. எற்பாடு பிரித்து பொருள் எழுதுக.
எல் + பாடு = எற்பாடு
எல் – சூரியன்
பாடு – மறையும் நேரம்
பொருள் – சூரியன் மறையும் நேரம்.

11. கருப்பொருள் என்றால் என்ன?
ஒவ்வொருநிலத்திற்கும் உரிய தெய்வம் முதலாகத்தொழில் வரையில் தனித்தனியே குறிப்பிடப்படுவது கருப்பொருள்.
 
12. உரிப்பொருள் என்றால் என்ன?
கவிதைகளில் கருப்பொருளின் பின்னணியில் அமைத்துப் பாடப்படுவது உரிப்பொருள்.

13. ஐவகை நிலத்திற்குரிய தெய்வங்களின் பெயர்களைக் கூறு.
குறிஞ்சி – முருகன்
முல்லை – திருமால்
மருதம் – இந்திரன்
நெய்தல் – வருணன்
பாலை – கொற்றவை

14. ஐவகை நிலத்திற்குரிய பறைகளைக் கூறு.
குறிஞ்சி – தொண்டகப் பறை
முல்லை – ஏறுகோட்பறை
மருதம் – மணமுழா, நெல்லரிகிணை
நெய்தல் – மீன் கோட்பறை
பாலை – துடி
 
15. ஐவகை நிலத்திற்குரிய யாழ், பண் எவை என எழுதுக.
 
16. ஐவகை நிலத்திற்குரிய மரம், பூ ஆகியவற்றை எழுதுக.
Answer:
 
 
17. ஐவகை நிலத்திற்குரிய மக்கள் யாவர்?
Answer:
 
18. ஐவகை நிலத்திற்குரிய விலங்குகள் மற்றும் பறவைகள் எவை எனக் கூறுக.
Answer:
 
19. ஐவகை நிலத்திற்குரிய தொழில்கள் யாவை?
Answer:
 
 
20. ஐவகை நிலத்திற்குரிய நீரை எழுதுக.
Answer:
 
21. ஐவகை நிலத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
Answer:
 
22. ஐவகை நிலத்திற்குரிய ஊர்களைக் குறிப்பிடுக.
Answer:

 
 

சிறுவினா

1. பெரும்பொழுதிற்குரிய கூறுகளை எழுதி, அக்காலத்திற்கான மாதங்களையும் எழுதுக
(1 ஆண்டின் 12 மாதங்களும் இரண்டிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (12/2 = 6)

2. சிறுபொழுதிற்குரிய கூறுகளையும் அதற்குரிய நேர அளவுகளையும் குறிப்பிடுக.
(1 நாளின் 24 மணி நேரமும் நான்கு நான்கு மணி நேரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (24/4=6)

3. ஐந்திணைக்கும் உரிய பெரும்பொழுதுகள் சிறுபொழுதுகளை எழுதுக.

கருத்துரையிடுக

0 கருத்துகள்