தமிழகத்தில் கொரோனா தொற்று நன்கு குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பதுபற்றி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டி உள்ளது. பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும்; அதற்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.
பெரும் தொற்று கட்டுக்குள் வந்த பிறகு அரசு தகுந்த முடிவு எடுக்கப்படும் மீண்டும் பெற்றோர் ஆசிரியர் மாணவர்களிடம் கருத்து கேட்ட பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என்று முதல்வர் தெரிவித்தார்.





0 கருத்துகள்